அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
கலர்ஸ் தமிழின் 'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் தொடர்ந்து 'சித்தி' சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்து வந்தார். தவிர மாடலிங்கில் கலக்கி வந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சித்தி 2 சீரியல் சிலமாதங்களுக்கு முன் நிறைவுற்றது. இதனையடுத்து ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டை கட்டி சென்றுவிட்டார். இதனால் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாகவுள்ள சீரியலில் அக்னி, தினேஷ், நிவிஷா மற்றும் ராதிகா ப்ரீத்தி ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்க இருந்தனர். தற்போது அந்த தொடரிலிருந்து ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்க உள்ளார். ப்ரீத்தி ஷர்மா இந்த தொடரில் அக்னிக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியானது ப்ரீத்தி ஷர்மா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சீரியல் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.