துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளிலிருந்து தன்னைத்தானே பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் வகையில் தற்பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டையிடுவது, கத்தி பேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என அதிகாரத்தால் மட்டுமே இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். மற்றபடி டாஸ்க்குகளில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்வதில்லை.
அசீமை பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி 'அட்டக்கத்தி','வெறும் வாய் சவுடால்' என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் தன்னை தமிழ் பற்று மிக்கவராக காட்டிக்கொள்ளும் அசீம் அண்மையில் தப்பு தப்பாக தமிழ் எழுதி சிக்கிகொண்டார். தற்போது மீம்கிரியேட்டர்ஸ்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். உண்மையான அசீமின் குணமே இப்படித்தானா? அல்லது பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய்விட்டனர்.
இந்நிலையில், அசீமின் சக நடிகரான அருண் குமார் ராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 'அசீமுடன் 'பூவே உனக்காக' தொடரில் நடித்திருக்கிறேன். அவர் உண்மையான முகமே இதுதான். பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒருமுறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டிவிட்டார். அதனால், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என்று சொல்லிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டுகொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில் கூட ஒரு பெண் தன்னை 'டா' போட்டு கூப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்' என்று அதில் கூறியுள்ளார்.