இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் வீட்டில் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அசீம், இந்த வாரம் அத்துமீறி அமுதவாணனை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே பெரிய அளவில் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அசீம் 'நெஞ்சில உரம் இருந்தா என்ன அடிடா' என ஆவேசமாக பேசி கத்தினார். அசீமின் இந்த செயலை பலரும் தற்போது கண்டித்து வருவதுடன், அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கேமரா முன் பேசிய அசீம் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகனும். வீடே எனக்கு எதிரா இருக்கும் போது தொடர்ந்து இந்த விளையாட்ட விளையாட நான் விரும்பல' என கூறியுள்ளார். மேலும், அமுதவாணனை அடித்தது குறித்து பேசிய அசீம் 'அந்த சண்டை கோபத்தால நடந்தது. அதை தயவு செஞ்சு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அது டெலிகாஸ்ட் ஆச்சுனா ரொம்ப பெரிய விஷயமா மாறிடும். என்னோட பெயர் கெட்டு போய்டும்' என பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.