இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியாகியுள்ள அசீம் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார். குறிப்பாக பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்தவாரத்தில் கூட அமுதவாணை கோபத்தில் அடித்து தள்ளிவிட்டு பின் மண்ணிப்பு கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சுபத்ரா அளித்துள்ள பேட்டியில் அவர் அசீம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. சுபத்ரா 'பூவே உனக்காக' சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அசீமுக்கும் ஹீரோயினுக்கும் ஒருமுறை பயங்கர சண்டை நடந்ததாகவும் அதற்குப்பின் தேவிப்பிரியாவுடனும் அசீம் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு முன்னால் யார் கைநீட்டி பேசினாலும் கோபாமாகிவிடுவார், சண்டை போடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படியிருக்கிறாரோ அதுதான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அசீமின் சக நடிகரான அருண் ராஜனும் அசீம் குறித்து இதே கருத்துகளை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.