எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் முகம் பதித்தவர் ராமர். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய நபராக கலந்து கொண்டு வருகிறார். என்னதான் தொலைக்காட்சி பிரபலம் என்ற போதிலும், ராமர் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி என்றும் பெயரெடுத்துள்ளார். ராமர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சக விஜய் டிவி தோழர்களான டைகர்கார்டன் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களை அவர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து ராமரின் இந்த வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.