இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை பிரபலமான ப்ரியதர்ஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும், விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ரேணுகா கதாபாத்திரம் தான். சொல்லப்போனால் ப்ரியதர்ஷினி 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடிப்பது கூட அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினிக்கு பதில் பானுமதி என்ற புதிய நடிகை நடிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர் 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து தான் ப்ரியதர்ஷினி விலகிவிட்டார் என அப்செட்டாகினர். ஆனால், ப்ரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகவில்லை. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்து வந்த செல்வி கதாபாத்திரத்திலிருந்து தான் விலகியுள்ளார். தற்போது அந்த செல்வி கதாபாத்திரத்தில் தான் பானுமதி நடிக்க உள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதியடைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.