தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரவீனா, தமிழில் சில சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது 'இனியா' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். சென்ற வருடம், பிரவீனாவின் புகைப்படங்கள் சில, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவர் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழகத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் விடுதலையானதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பிரவீனா மட்டுமில்லாமல் அவருடைய மகளின் புகைப்படங்களும் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பிரவீனா சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை செய்து குற்றவாளியான பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர். கைதான பாக்யராஜூக்கு 22 வயது தான் என்பதுடன் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.