ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டியும், நக்ஷத்திராவும் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். சைத்ரா தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியல் எதிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், தோழியை காணச் சென்ற சைத்ரா ரெட்டி நக்ஷத்திராவின் கர்ப்பமான வயிறை முத்தமிட்டும், கட்டி அணைத்தும் தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரின் நட்பையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.