இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டியும், நக்ஷத்திராவும் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். சைத்ரா தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியல் எதிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், தோழியை காணச் சென்ற சைத்ரா ரெட்டி நக்ஷத்திராவின் கர்ப்பமான வயிறை முத்தமிட்டும், கட்டி அணைத்தும் தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரின் நட்பையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.