ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சரிகமபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரமணியம்மாள், வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இவரது பாடும் திறமையை அறிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி 'சரிகமபா' நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்தது. தனது திறமையால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட ரமணியம்மாளுக்கு லட்சகணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். ரமணியம்மாளுக்கு செல்லமாக ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று செல்ல பெயரும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், 69 வயதான ரமணியம்மாள் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பதிவுகளில் ரமணியம்மாளுக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரிகமபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் 'என் அன்பிற்குரிய ரமணி அம்மா! உங்கள் குரல் என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்' என்று பதிவிட்டிருந்தார். அதோடு நிற்காமல் ரமணியம்மாள் வீட்டிற்கு நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.