சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஆரம்பகாலகட்டமான 1990-களில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் அதன் தொகுப்பாளர்களும் மிகவும் பிரபலமாக வலம் வந்தனர். உதாரணத்திற்கு டாப் 10 சுரேஷ், நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி, திரைவிமர்சனம் ரத்னா ஆகியோரை சொல்லலாம். இதில், உங்கள் சாய்ஸ் பெப்ஸி உமாவிற்கு தான் அதிக ரசிகர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதளவில் பங்கேற்கவில்லை.
பல ஆண்டுகளாக ரசிகர்களும் பெப்ஸி உமா என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்? என கேட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பெப்ஸி உமா, ரத்னா, விஜய சாரதி ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரேகா நாயரும் அந்நிகழ்ச்சியின் போது பெப்ஸி உமாவை சந்தித்து பேசி அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களில் தற்போதும் அழகு குன்றாமல் ஜொலிக்கும் பெப்ஸி உமாவை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.