இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆரம்பகாலகட்டமான 1990-களில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் அதன் தொகுப்பாளர்களும் மிகவும் பிரபலமாக வலம் வந்தனர். உதாரணத்திற்கு டாப் 10 சுரேஷ், நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி, திரைவிமர்சனம் ரத்னா ஆகியோரை சொல்லலாம். இதில், உங்கள் சாய்ஸ் பெப்ஸி உமாவிற்கு தான் அதிக ரசிகர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதளவில் பங்கேற்கவில்லை.
பல ஆண்டுகளாக ரசிகர்களும் பெப்ஸி உமா என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்? என கேட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பெப்ஸி உமா, ரத்னா, விஜய சாரதி ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரேகா நாயரும் அந்நிகழ்ச்சியின் போது பெப்ஸி உமாவை சந்தித்து பேசி அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களில் தற்போதும் அழகு குன்றாமல் ஜொலிக்கும் பெப்ஸி உமாவை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.