பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
சென்னை, திருவான்மியூரில் உள்ள பிரபல நாட்டிய கல்லூரியான கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகள் பலர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த சம்பவம் குறித்து பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி தனது கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த பேட்டியில், 'நானும் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி தான். கலாஷேத்ராவின் ஆசிரியர் நிர்மலா என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். ஹரிபத்மனால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர். ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக மாற்றப்படுகிறார்கள். கலாஷேத்ரா கலாசாரத்தின் அடையாளம். அதற்கு அவப்பெயர் வரும் போது அம்மாவை தவறாக பேசுவது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த கருத்தானது சோசியல் மீடியாக்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.