கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சென்னையில் உள்ள கலாச்ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் முன்னாள் மாணவியான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், சோசியல் மீடியாவில் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். அதில், எப்போதுமே ஒரு விஷயத்தை ஒரு பக்கமாக இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. பேராசிரியர்கள் பக்கமும் இருந்து பார்க்க வேண்டும். 80 வருட பாரம்பரியம் உள்ள கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற முறையில் அங்கு எந்த விதமான தவறு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவரை பலரும் வசை பாடினார். சிலர் மிரட்டவும் செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார் அபிராமி.
இந்த நிலையில் அபிராமிக்கு, நடிகை சனம் ஷெட்டி ஒரு எதிர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஆணவம் அறியாமையான பேச்சு பேச விரும்பவில்லை. உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அவர்களுக்கும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. 80 வருடங்களாக நீங்கள் அந்த கல்லூரியில் இருந்தீர்களா? அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் பேராசிரியர்கள் பக்கம் மட்டும் இருக்கிறீர்கள்? விரைவில் உண்மை வெளிவரும். அதுவரை காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார் சனம் செட்டி.
அபிராமி - சனம் ஷெட்டி ஆகிய இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களாகவும் இருந்தவர்கள்.