ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான அர்ச்சனா 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலமாக மோசமான திரைக்கதையுடன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து விலகுவதாக அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியேறிவிட்டார். சீரியலின் கதை போக்கும், கதாபாத்திரத்தின் நகர்வும் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட அதிருப்தியினால் கொஞ்ச நாளாகவே சீரியலில் இருந்து தன்னை நீக்கிவிடுமாறும் அர்ச்சனா கூறி வந்தாராம். ஆனால், சீரியல் குழு பல காரணங்களை அர்ச்சனா வெளியேறவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமா? என்று யோசித்த அர்ச்சனா சீரியலிலிருந்து வெளியேறுவது தான் நல்லது என சீரியலிலிருந்து வெளியேறிவிட்டாராம். தற்போது அர்ச்சனா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.