அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சின்னத்திரை தொடரில் இணைந்து நடித்த அர்னவும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு அர்னவ் இன்னொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார் திவ்யா. அந்த புகாரின் பேரில் அர்னவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை விட்டு பிரிந்த திவ்யா அதன்பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் அர்னவ் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர்தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. திவ்யா போலீசில் புகார் செய்தபோது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்னவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அர்னவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.