இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெளியில் தைரியமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் பலரும் தங்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக பயந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சர்ச்சை நாயகி வனிதா, தன் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் பேசுவதும் என தைரியமான பெண்ணுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். ஆனால், அவருக்குள்ளும் பயம் இருக்கிறது. மிகச்சிறிய அறை, லிப்ட், இருட்டான குகை, திருவிழாக்கூட்டம், ட்ரெயின் போன்ற இடங்களில் இருக்கும் போது நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் சிலருக்கு உண்டாகும்.
அந்த நோய்க்கு பெயர் தான் ‛க்ளாஸ்ட்ரோபோபியா'. அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கும் க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக வனிதா கூறியுள்ளார். லிப்ட், கழிவறை போன்ற சிறிய இடங்களில் தன்னால் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த நோய் எனக்கிருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.