ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள்.. பாக்யராஜ், டி.ராஜேந்தர், வித்யாசாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வரும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.
“இந்த நிகழ்ச்சியில் இணைவதற்கு தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் . சிறப்பான குரல் தேடல்களை தொடர்ந்து செய்து வரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தான் பார்த்து வருகிறேன். என்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் யுவன்.