தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல செய்திவாசிப்பாளரான மெர்சி சித்ரா அண்மையில் வெளியான துணிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வரும் மெர்சி சித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அவர் 'மீடியாவிற்குள் நான் வரும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது எனக்கு எந்த பிரச்னையும் நடக்கவில்லை. எனவே தைரியத்துடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தேன். பலவிதமான எதிர்ப்புகள் வந்தது. சிலர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார்கள், சிலர் தவறாக பேசினார்கள், சிலர் இதை செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். அட்ஜெஸ்மெண்ட் செய்யவில்லை என்றால் சிலர் போட்டோவில் நான் நன்றாக இருப்பதாகவும் நேரில் கருப்பாக இருப்பதாகவும் விமர்சித்து ஒதுக்கினார்கள். இப்படி பல தடைகளை தாண்டி தான் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது' என்று அதில் கூறியுள்ளார். மீடியாவில் செய்திவாசிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி என்றால், எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவோடு வரும் பெண்களின் நிலை தான் என்ன?