இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரோஜா தொடர் நிறைவடைந்த பின் ஜீ தமிழின் 'சீதா ராமன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இதற்கிடையில், ராகுல் என்பவரை காதலித்து வந்த ரியங்கா, கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ப்ரியங்கா கூறிய போது, 'சீதா ராமன் தொடர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கணவர் சொல்கிற போது அதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலை விட்டு விலகுகிறேன்' என்று கூறியிருக்கிறார்.