ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சம்யுக்தா இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு 22 அவருக்கு 32. இருந்தாலும் நான் ஓகே சொன்னேன். நல்லவரா இருந்தால் போதும் என்று நினைத்தேன். எங்கள் காதலை வெளிப்படுத்திய பிறகு தான் அவர் சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் மிரட்டலுக்கு பயந்து காலில் விழுவேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பேன். ப்ரேக்கப் என்று சொல்லி மிரட்டுவார். கல்யாணம் கூட கட்டாயப்படுத்தி செய்தார்' என்று அவரைப்பற்றி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
சம்யுக்தா விஷ்ணுகாந்த் குறித்து பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் விஷ்ணுகாந்த் இப்படிப்பட்டவரா? என கோபத்துடன் அவரை விமர்சித்து வருகின்றனர்.