சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சம்யுக்தா இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு 22 அவருக்கு 32. இருந்தாலும் நான் ஓகே சொன்னேன். நல்லவரா இருந்தால் போதும் என்று நினைத்தேன். எங்கள் காதலை வெளிப்படுத்திய பிறகு தான் அவர் சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் மிரட்டலுக்கு பயந்து காலில் விழுவேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பேன். ப்ரேக்கப் என்று சொல்லி மிரட்டுவார். கல்யாணம் கூட கட்டாயப்படுத்தி செய்தார்' என்று அவரைப்பற்றி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
சம்யுக்தா விஷ்ணுகாந்த் குறித்து பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் விஷ்ணுகாந்த் இப்படிப்பட்டவரா? என கோபத்துடன் அவரை விமர்சித்து வருகின்றனர்.