வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வந்தார். அவரது மிரட்டலான நடிப்பு நேயர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வந்தது. ஆனால், சோனா திடீரென மாரி சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தற்போது சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
மாரி தொடரில் சோனாவுக்கு மருமகளாக நடிக்கும் ஷப்னம் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் எல்லோரையும் ஜாலியாக கிண்டலடித்து பேசுவார். அவர் ஒரு முறை சூட்டிங்கின் போது சோனாவை பற்றி கிண்டலாக பேச இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கோபமான சோனா ஒருகட்டத்தில், 'மாரி சீரியல்ல அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்' என்ற ரேஞ்சில் சீரியல் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். சோனாவை சமாதானப்படுத்த முடியாத சீரியல் குழுவினர் தாரா கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை தேட ஆரம்பித்துவிட்டதாக சின்னத்திரை வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.