ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிபோடிக்கான பட்டியலில் அக்ஷயா, ஜீவன் பத்ககுமார்,புருஷோத்தமன், லக்ஷனார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாகார்ஜுனா இடம்பெறவில்லை. நாகார்ஜுனா ஏழ்மையான மீனவ குடும்பத்தில் பிறந்தவர். லுங்கி அணிந்து மேடையேறிவர். கேள்வி ஞானத்தில் மட்டுமே பாடல் பாடும் திறமையை வளர்ந்து கொண்டவர். அதேசமயம் அவர் பாடுவதை பார்த்து ஹரிஹரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களே அசந்து போய் பாராட்டியுள்ளனர். மேலும், மக்களின் ஆதரவும் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், அவர் பைனல் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு நபர் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்றால் அதற்காகவே அவருக்கு பைனலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்! என மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகார்ஜுனா பைனலில் பாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை என்றாலும், 5-வது பைனலிஸ்டாக அவர் கட்டாயம் இடம்பெறுவார் என மக்கள் நம்பி வருகின்றனர்.