விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிபோடிக்கான பட்டியலில் அக்ஷயா, ஜீவன் பத்ககுமார்,புருஷோத்தமன், லக்ஷனார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாகார்ஜுனா இடம்பெறவில்லை. நாகார்ஜுனா ஏழ்மையான மீனவ குடும்பத்தில் பிறந்தவர். லுங்கி அணிந்து மேடையேறிவர். கேள்வி ஞானத்தில் மட்டுமே பாடல் பாடும் திறமையை வளர்ந்து கொண்டவர். அதேசமயம் அவர் பாடுவதை பார்த்து ஹரிஹரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களே அசந்து போய் பாராட்டியுள்ளனர். மேலும், மக்களின் ஆதரவும் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், அவர் பைனல் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு நபர் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்றால் அதற்காகவே அவருக்கு பைனலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்! என மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகார்ஜுனா பைனலில் பாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை என்றாலும், 5-வது பைனலிஸ்டாக அவர் கட்டாயம் இடம்பெறுவார் என மக்கள் நம்பி வருகின்றனர்.