இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் திருமணம் செய்து பிரிந்து சென்ற பின் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்கிற ரேஞ்சில் சித்தரித்து வீடியோ வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை அம்பலப்படுத்தினார். அதன்மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண் வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார்.
இந்நிலையில், பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில், சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை பொய்யான நரக வாழ்க்கை என்றும், அதிலிருந்து தன்னை இயற்கையும் இறைவனும் மீட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த கடினமான தருணத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் ஆதரவு தெரித்து வருவதுடன் விஷ்ணுகாந்த் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.