வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், முதன்மை கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் கதையின் போக்கு தனக்கு பிடிக்காத காரணத்தால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து யார் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்தை எண்ட் கார்டு போட்டு முடித்திருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரத்திற்கே எண்ட் கார்டா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மாற்றாக மற்றொரு நடிகையை கண்டுபிடித்துவிட்ட சீரியல் குழு மீனாட்சி கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் நடிகை ஸ்ரீ ரஞ்சனி தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் புதிய மீனாட்சியை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.