மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், நடிகர் அர்னவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில நாட்களிலேயே அர்னவ் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகாராளித்தார். தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், தவிர ஒரு ஆணை காதலிப்பதாக ஏமாற்றி அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாகவும் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், 'முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும், என்னுடைய கேரியரை காலி செய்வதற்காக சீரியல் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்' என்று பேட்டியளித்துள்ளார். மேலும், திவ்யா, அர்னவின் கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது போல் வாட்ஸப் ஸ்கீரின்ஷாட்டையும் வெளியிட்டிருக்கிறார்.