ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தற்போது சின்னத்திரையில் சில சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். சென்னை கே கே நகர், பி.டி.ராஜன் சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டு வாசலில் இருக்கும் சில பொருட்கள் காணாமல் போவதால் சந்தேகமடைந்த சங்கீதா, சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்துள்ளார்.
அதில், உயர் ரக இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சங்கீதா வீட்டு வாசலின் முன் இருக்கும் செருப்பை காலால் லிப்ட்டுக்குள் தட்டிவிட்டு பின் அதை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது அம்மா மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில், மர்ம நபர்கள் கூலாக திருடிச்செல்வதை பார்க்கும் போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.