சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ரோஜா தொடரின் மூலம் பிரபலமான ப்ரியங்கா நல்காரிக்கு தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ரோஜா சீரியல் முடிந்தவுடன் அவர் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ப்ரியங்காவும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்திருந்தார். இதற்கிடையில், தனது நீண்ட நாள் காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்ட ப்ரியங்கா, திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன் கணவருக்காக சீதா ராமன் தொடரிலிருந்து விரைவில் வெளியேற இருப்பதாக திடீரென அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் 'கடைசி சீதா மேக்கப்' என்ற குறிப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சக நடிகரான ஜே டிசவுசாவும் 'சீதாவுடன் கடைசி காட்சி' என்று போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மனமுடைந்துள்ளனர். ப்ரியங்காவை மீண்டும் நடிக்க சொல்லி சோஷியல் மீடியா பதிவுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.