ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் குடும்ப குத்துவிளக்காகவும், இன்ஸ்டாகிராமில் அல்ட்ரா மாடர்னாகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், ரேஷ்மாவின் கவர்ச்சியான படங்களுக்கு கமெண்ட் பதிவிடும் சிலர் அவர் உடல் அங்கங்களை சுட்டிக்காட்டி ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதைபார்த்து கடுப்பான ரேஷ்மா, 'சிலருக்கு உருவகேலி செய்வது சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், அதை கேட்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவே மாட்டீர்களா?. சிலர் என்னிடம் ஆப்ரேஷன் செய்து உதட்டையும், மார்பகத்தையும் பெரிதாக்கினீர்களா என்று கேட்கிறார்கள். சரி அப்படி செய்தால் தான் என்ன? அது என் தனிப்பட்ட விருப்பம். இப்போதெல்லாம் நடிகைகள் நாங்கள் சர்ஜரி செய்வதை விட பொதுமக்கள் தான் அதிகமாக அழகுக்காக சர்ஜரி செய்து கொள்கின்றனர். மேலும், நான் வெயிட் போட்டதற்கு காரணம் விடாமல் ஷூட்டிங் செல்வதும், தூக்கமின்மையும் தான். எனக்கு பிடித்த மாதிரி நான் இருக்கிறேன். இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? ' என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.