வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார எபிசோடில் கங்கை அமரனும் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். அந்த எபிசோடில், போட்டியாளரை அழைக்க பாடல் போடும் போது கங்கை அமரன் இசையமைத்த 'வந்தனம் என் வந்தனம்' என்ற பாடல் இசைக்கப்படுகிறது. இதை மாகாபாவும் குரேஷியும் வந்தனம் சைதாபேட்டை நந்தனம் என மாறி மாறி கலாய்க்க, கோபமடைந்த கங்கை அமரன் எனக்கு இது சரிபட்டு வராது என்று கூறி ஆத்திரத்துடன் மேடையை விட்டு எழுகிறார். இந்த வீடியோவானது தற்போது புரோமோவாக ரிலீஸாகியுள்ளது. இதைபார்க்கும் பலரும் கங்கை அமரன் போன்ற லெஜண்ட்டுகளையும் டிஆர்பிக்காக அசிங்கப்படுத்துவதா? என விஜய் டிவியை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இது பிராங்க்காக கூட இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகின்றனர்.