இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது 36 வயதாகும் டிடி, சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம், இவர் தான் மாப்பிள்ளை அவர் தான் மாப்பிள்ளை என பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ள டிடி, 'சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு திருமணம் என்றால் வெளியே தெரிய தான் போகிறது. திருமணம் என்பது சாதனை அல்ல. பத்து வருடத்திற்கு முன் திருமணம் குறித்து இருந்த புரிதல் இப்போது மாறியிருக்கிறது. எல்லோருக்கும் திருமணம் என்பது அவசிய தேவையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றி வரும் விஷயங்களுக்கு நான் கவலைப்பட மாட்டேன். நான் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். நீங்கள் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்' என கூறியுள்ளார்.