தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமூக வலைதளத்தில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு அவ்வபோது சர்ச்சைகளிலும் சிகிச்சை கொண்டு வருகிறார் நடிகை கஸ்தூரி. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், அஜித்னா யாரு? கேக்க மாட்டாங்களா. பின்னே பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல், யாரும் தூக்கி விடாம, யாரையும் கெடுக்காமல், சொந்த முயற்சியில் மேல வந்தவரு. அவரை எல்லாம் எப்படி தெரியும் என்று பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.
இதற்கு அதிகமான ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்தார்கள். அதில் ஒருவர், அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில், ‛ஜாதி பார்க்கும்போதே உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா?' என்று பதில் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி. அவரது இந்த பதிவுக்கு அதிகப்படியான கமெண்ட்களும் லைக்குகளும் கிடைத்து வருகிறது.