ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, சமீபகாலங்களில் மூட்டு வலியால் அவதிப்படுகிறார். இதனால் தான் தற்போது மேடை நிகழ்ச்சிகளிலோ, நீண்ட நேரம் நிற்பது போன்ற நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்பதில்லை. இந்நிலையில், அவருக்கு என்னதான் ஆயிற்று என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப சமீபத்திய பேட்டி ஒன்றில், 'எனக்கு சிறிதான மூட்டு வலி பிரச்னை இருந்தது. அதற்காக செய்த ஆப்ரேஷன் தவறாக போய்விட்டது. இதனால் அதை சரி செய்ய மீண்டும் மீண்டும் என 3 சர்ஜரி செய்தார்கள். ஆனால், இதெல்லாம் செய்து முடிப்பதற்குள் மூட்டுவலி பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த வலி ஏன் வருகிறது எதனால் வருகிறது என்பது தெரியவேயில்லை. ஆனால், இந்த பிரச்னை என் வாழ்நாள் முழுவதும் வரும் பிரச்னையாகிவிட்டது. என்ன சிகிச்சை செய்தாலும் சரியே ஆகாது. இந்த பிரச்னையை நம் மனது ஏற்றுக்கொள்ளும் போது நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் தான் இப்போது அதிகமாக ஷோ செய்ய முடிவதில்லை' என்று கூறியுள்ளார்.