திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்கள் இப்போது மாறிவிட்டனர். ஆனால், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், இதுவரை சீரியலை விட்டு விலகவில்லை. அவர் தான் சீரியலுக்கு ஒரு முக்கிய ப்ளாஸாக உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்ததன் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாக அண்மையில் முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தயாரிப்பு தரப்பினர், சுஜிதா விலகினால் சீரியல் நன்றாகவே இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் சுஜிதாவிடம் சமாதானம் பேசி இதுவரை பேசப்பட்ட சம்பளத்தை விடவும் அதிக தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவை சுஜிதா கைவிட்டுவிட்டதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.