இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா?. இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் மிகையல்ல. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தமிழில் சில படங்களிலும் கோபிநாத் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது முதல்முறையாக சீரியலிலும் கோபிநாத் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் கோபிநாத்தின் என்ட்ரி புரோமோவில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் கோபிநாத் கெஸ்ட் ரோலில் வருகிறாரா? அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. எனினும், கோபிநாத்தின் இந்த என்ட்ரி விரைவில் அவர் சீரியலில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்.