சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி வெள்ளித்திரையும் சின்னத்திரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‛வானத்தைப் போல' சீரியல் குழுவினர் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு பலத்தை தரவும் வேண்டி வானத்தைப் போல தொடரின் ஹீரோ ஸ்ரீகுமார் தனது செட்டில் இருக்கும் சக நடிகர்களையும், வேலை செய்பவர்களையும் ஒரு நிமிடம் மவுனம் காக்குமாறும் கேட்டுக்கொள்ள அனைவரும் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.