ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எதிர்நீச்சல் தொடரின் மூலம் டிரெண்டிங் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. மனதில் பட்டதை பொதுவெளியில் ஓப்பனாக பேசக்கூடியவர். அவர் கொடுத்த பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பல கருத்துகளை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல கருத்துகளை கூறி எதிர்தரப்பினரை வாயடைத்தார். அந்த வீடியோவானது தொடர்ந்து சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த பழ.ஆறுமுகம் என்ற நபர் மாரிமுத்துவின் கருத்துகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாரிமுத்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.