மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகிய நிலையில் கணவரின் இழப்பு ஸ்ருதி சண்முகப்பிரியாவை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அந்த இழப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள பலவித முயற்சிகளை எடுத்த அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது மனநிலை குறித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது புதிய பயணத்தை தொடங்கியுள்ள ஸ்ருதி, தனது கணவருடன் நினைவுகளோடு காட்டில் அமைதியை தேடிச் செல்கிறார். வைல்ட் லைப் போட்டோகிராபராக காட்டுக்குள் கேமராவுடன் பயணம் செய்யும் ஸ்ருதி சில புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு தன்னை துன்பத்திலிருந்து மீள உதவி செய்த பலருக்கும் நன்றி சொல்லியுள்ளார்.