ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவி பிரபலமான பாலா கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் மக்களை சிரிக்க வைத்து எண்டர்டெயின் செய்து, தற்போது தான் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும், தான் வாங்கும் குறைவான சம்பளத்தில் பெரும் தொகையை தொடர்ந்து பொதுமக்களின் நன்மைகளுக்காக செலவழித்து பலரது உள்ளங்களில் ஹீரோ அந்தஸ்தை பெற்று வருகிறார்.
ஏழை குழந்தைகளின் படிப்பு, ஆம்புலன்ஸ் சேவை என பல நல்ல காரியங்களை செய்து வரும் பாலா, சமீபத்தில் 125 விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் மண்வெட்டி, கடப்பாறை மற்றும் விவசாய உபகரணங்களை வழங்கியுள்ளார். இதனை சில நெட்டிசன்கள் பாலா விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி செய்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து பாலாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரசிகர்கள் படத்தில் மட்டுமே தானம் செய்து சீன் போடுகிறார்கள். அதற்கு கைத்தட்டும் நீங்கள் சாதரண மனிதரான பாலாவின் நல்ல செய்கைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை கேலி செய்யாதீர்கள் என சண்டையிட்டு வருகின்றனார்.