வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார் நடிகர் சதீஷ். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு பாக்கியலெட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்தது. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வரும் சதீஷ் அவ்வப்போது எதாவது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மீண்டும் நான் ரொம்ப நாட்கள் கோபி கேரக்டரில் தொடர்வேனா என்று தெரியாது. கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாரித்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் போதுமென்றாகி விடுகிறது. நாம் நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டரே இதுதான் என்று பலரும் அசிங்கமாக திட்டுகின்றனர். பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என் ஜாதிக்காரர்கள் பலரும் இதை அனுபவிக்கின்றனர். நான் ஜாதிக்காரர்கள் என்று சொன்னது என்னை போன்ற நடிகர்களை தான். இப்போது புரிகிறதா? நான் ஏன் அடிக்கடி இண்ஸ்டாகிராமை டி-ஆக்டிவேட் செய்கிறேன் என்று?' என தன் வருத்தங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.