தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் சீசன் 7-ல் பிரபல எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லத்துரை என்ட்ரி கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரும் பிக்பாஸ் வீட்டில் வரிசையாக கதைகள் சொல்லி அசத்தி வந்தார். அவர் மீது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி புகார் ஒன்றை வைத்தார். சக ஹவுஸ்மேட்டுகளும் அவரை சோம்பேறி என்று கூட கிண்டல் செய்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள பவா செல்லத்துரை, 'இந்த வீட்டுக்கு வரும் போது சூழ்ச்சிகள் சதிகள் இருக்கும் என்று மட்டும் தான் நினைத்தேன். ஆனால், இங்கு அதிகமாக வன்மம் தான் இருக்கிறது. இங்கிருக்கும் டாஸ்க்குகளை செய்யவும் என் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்' என்று கூறி வெளியேறிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பவா செல்லத்துரை மீண்டும் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தங்கள் விருப்பத்தை சோஷியல் மீடியா மூலமாக பிக்பாஸிடம் தெரிவித்து வருகின்றனர்.