தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற போது மஹாலெட்சுமி ஜாலியாக சீரியலில் நடித்துக்கொண்டு போட்டோஷூட் வெளியிட்டு வருவதாக பலரும் அவரை குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ரவீந்தருடன் மஹாலெட்சுமி போட்டோ வெளியிட்டு, 'எனது முகத்தில் சிரிப்பை வரவழைக்க நீங்கள் தவறியதில்லை. காதலுக்கு காரணம் ஒருவரது நம்பிக்கை தான். இங்கு என்னை விட நம்பிக்கையே உன்னை காதலிக்கிறது. அதே காதலை என் மீது பொழிந்து என்னை முன்பு போல் காப்பாற்றுவாயாக. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் அம்மு' என்று பதிவிட்டுள்ளார்.
ரவீந்தர் - மஹாலெட்சுமிக்கு இடையே இருக்கும் இந்த புரிதலையும், காதலையும் பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.