திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரோஜா தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது, காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனால், சில வாரங்களிலேயே அந்த சீரியலை விட்டு விலகினர். இந்நிலையில், பிரியங்கா நல்காரி தற்போது அதே தொலைக்காட்சியில் நளதமயந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் தனது கணவர் ராகுல் வர்மாவுடன் சேர்ந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.