இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரோஜா தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது, காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனால், சில வாரங்களிலேயே அந்த சீரியலை விட்டு விலகினர். இந்நிலையில், பிரியங்கா நல்காரி தற்போது அதே தொலைக்காட்சியில் நளதமயந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் தனது கணவர் ராகுல் வர்மாவுடன் சேர்ந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.