மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சினிமா நடிகை டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பூமிகா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காண்பித்தனர். இதன் காரணமாக டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் கசிந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டெல்னா டேவிஸ், 'அன்பே வா தொடரிலிருந்து விடைபெறுவதை நினைக்கும் போது இதயம் உணர்ச்சிகளாலும், நன்றியாலும் நிரம்பி வழிகிறது. இதுவெறும் குட்பை மட்டுமல்ல. உங்கள் அன்பிற்கும் நீங்கள் கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. என் வாழ்வில் ஒரு அத்தியாயமாக அன்பே வா தொடரின் அழகான நினைவுகள் இருக்கும். சைனிங் ஆப் பூமிகா' என்று பதிவிட்டுள்ளார்.