தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் 'சந்தியா ராகம்'. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தாரா தனிப்பட்ட காரணங்களுக்கு விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சந்தியா ஜாகர்லமுடி, அந்தரா ஸ்வர்ணகர், ராஜீவ் பரமேஸ்வர், சுர்ஜித் குமார், அக்ஷயராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரம்மா தேவன், என்.பிரியன் இயக்குகிறார்கள்.