இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் தொடரிலிருந்து அண்மையில் தான் ஹீரோ அக்னி விலகினார். அவர் விலகியதற்கு விபத்து தான் காரணம் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிகாந்தும் சீரியலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிகாந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாட்களாக எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. இதுபற்றி பலமுறை கேட்டபோதும் இன்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை. இந்த தொடரில் கதாநாயகன் கூட இந்த பிரச்னையினால் தான் வெளியேறினார்' என்று கூறியுள்ளார்.