துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரகர்ஷிதா. சந்திரமுகி படத்திலும் வேலன் சீரியலிலும் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். அதன்பின் கேமரா முன் தோன்றாத பிரகர்ஷிதா தற்போது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார். இந்நிலையில், அவரை நீண்ட இடைவேளைக்கு பிறகு ராதிகா தனது சீரியலில் நடிக்க அழைக்க வந்துள்ளார். ராதிகா, பிரகர்ஷிதா காம்போவில் செல்வி சீரியலுக்கு பிறகு தற்போது தாயம்மா குடும்பத்தார் என்கிற தொடர் டிடி பொதிகை சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனையொட்டி தனக்கு வாய்ப்பளித்த ராதிகாவிற்கு பிரகர்ஷிதா நன்றி தெரிவிக்கும் வகையில் செல்வி அம்மா டூ தாயம்மா என இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.