தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு முறையும் 'பிக் பாஸ்' டைட்டில் வென்றவர்கள் குறித்து விமர்சனம் வருவது வழக்கம். இந்த முறை கமல் மீதே விமர்சனம் வந்தது. தனது படத்தில் நடித்த நடிகைகளுக்கு அவர் ஆதரவாக இருந்தார் என்று கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு 'பிக் பாஸ்' பட்டம் வென்ற அர்ச்சனா மீது விமர்சனம் எழுந்தது. அவர் பலருக்கு பணம் கொடுத்து டீம் ஒர்க் மூலம் தனக்கு வாக்களிக்க வைத்ததாக அந்த குற்றச்சாட்டு இருந்தது. அதாவது பணம் கொடுத்துதான் பட்டம் வென்றார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து இதுவரை மவுனமாக இருந்த அர்ச்சனா, இப்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது “பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதேசமயத்தில் நான் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றேன் என சலசலப்பும் வந்திருக்கிறது. எனக்கு 19 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும். இவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்? இவ்வளவு ரூபாய் செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி ரூபாய் வைத்து ஒரு படத்தை இயக்கி நான் ஹீரோயினாக நடித்து விடுவேன். அதனால், இதெல்லாம் சுத்தப் பொய். நான் மக்கள் ஆதரவில்தான் ஜெயித்தேன்” என்று கூறியுள்ளார்.