தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கும் பவதாரிணிக்குமான உறவு குறித்து நெகிழ்ச்சியாக கூறி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வனிதா தனது இண்ஸ்டாகிராம் பதிவில், 'பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, வெறும் சகோதரி இல்லை. என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். நமக்குள் உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. உன்னை மீண்டும் சந்திக்கும் வரையில் நமக்குள் சிறுவயதில் இருந்த உறவு என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்' என தனது மன வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.