வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், முன்னதாக பொறுப்பிலிருந்த ரவி வர்மா மற்றும் அவரது குழுவிலிருந்த உறுப்பினர்கள் பணமோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ரவிவர்மா மீது நடிகை ஒருவர் மற்றொரு புகாரை கொடுத்துள்ளார்.
அதாவது ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அந்த நடிகையிடம் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பொதுக்குழுவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி மோசடியோடு சேர்த்து ரவிவர்மா மீதான இந்த புகார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.