தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், முன்னதாக பொறுப்பிலிருந்த ரவி வர்மா மற்றும் அவரது குழுவிலிருந்த உறுப்பினர்கள் பணமோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ரவிவர்மா மீது நடிகை ஒருவர் மற்றொரு புகாரை கொடுத்துள்ளார்.
அதாவது ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அந்த நடிகையிடம் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பொதுக்குழுவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி மோசடியோடு சேர்த்து ரவிவர்மா மீதான இந்த புகார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.