இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அலைகள் சீரியலில் தான் மிகவும் கொடூரமாக நடித்திருந்ததாகவும் அப்போது பெண்கள் பலரும் என்னை பார்க்கும் போது மண்ணை வாரி தூற்றினார்கள். அதனால் கூட தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு பின் சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகவும் குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.