ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத்துக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவில் சற்றும் எதிர்பாராத வகையில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், தாங்கள் பாரா ஒலிம்பிக்கில் விளையாட காரணமாகவும் அதற்காக பல உதவிகளையும் செய்தவர் கோபிநாத் தான் என்று நெகிழ்ச்சியாக பேசியதோடு பாரா ஒலிம்பிக்கில் வாங்கிய மெடல்களை கோபிநாத் கையால் அணிவிக்க சொல்லி கவுரவப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் கபடி வீராங்கனை ஒருவர் தனது கல்லூரி படிப்பிற்காக உதவிகேட்டபோது அவருடன் சேர்ந்த 11 பெண்கள் படிப்பதற்கும் கோபிநாத் உதவி செய்துள்ள தகவலும் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து பலரும் கோபிநாத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.